×

சென்னை ஓபன் சேலஞ்சர் அரையிறுதியில் சுமித் நாகல்

சென்னை: ஏடிபி சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, இந்தியாவின் சுமித் நாகல் தகுதி பெற்றார். காலிறுதியில் இங்கிலாந்தின் ஜே கிளார்க்குடன் (24 வயது, 313வது ரேங்க்) நேற்று மோதிய நாகல் (25 வயது, 506வது ரேங்க்) 6-1, 6-4 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி, 1 மணி 22 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. தகுதிச் சுற்றின் மூலம் முதன்மை சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெற்ற  சுமித், இப்போது அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். ஒற்றையர் பிரிவில் மற்ற இந்திய வீரர்கள் முதல் சுற்றுடன் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

அரையிறுதியில்  அமெரிக்க வீரர் நிகோலஸ் அல்போரனுடன் (25 வயது, 219வது ரேங்க்) அவர் மோத உள்ளார். காலிறுதியில் ஜப்பான் வீரர்  யசுடாகா உச்சியமாவுடன் (30 வயது, 305வது ரேங்க்) மோதிய நிகோலஸ் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்றார். ஆஸி. வீரர்கள் மேக்ஸ் புர்செல், டேன் ஸ்வீனி ஆகியோரும் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளனர். ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி - ஜீவன் நெடுஞ்செழியன் இணை 6-4, 6-7 (5-7), 4-10 என்ற செட் கணக்கில் செபாஸ்டியன் ஆப்னர் (ஆஸ்திரியா) - நினோ செர்டாருசிச் (குரோஷியா) ஜோடியிடம் போராடி தோற்றது.

Tags : Sumit Nagal ,Chennai Open Challenger , Sumit Nagal in Chennai Open Challenger semi-final
× RELATED பெங்களூரு ஓபன் சுமித் நாகல் ஏமாற்றம்